அன்புள்ள அன்புக்கு
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
நான் ஏதேனும்
வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
தொண்டை குழி பதபதக்க வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
குரலில் சிறு தென்றல் நடுங்க
நீ சொன்னாய்
கடிதம் வரைந்தது நீதானா?
கொடுத்தது நீ இல்லையே
எழுத்து பார்த்து
இலக்கணம் மதிப்பிட
நான் ஒன்றும் வாசகியல்ல
உன் அன்புக்காய் காத்திருந்த
காதலி
வார்த்தையில் பார்வையில்
மூச்சில் மனதில்
அத்தனையிலும் எதிர்பார்த்தேன்
வர்ணனை எழுத்தில் மட்டுமல்ல
வாழும் காலம் வரை
" நான் உன்னை காதலிக்கிறேன்"
6 comments:
valentine special nice
கற்பனை தலைதூக்கும்
கணங்களிலெல்லாம்
காகிதத்தில்
தலைசாய்க்கிறது காதல் ..
//manazeer masoon said...
valentine special nice//
Thank You Friend!
//Mathi said...
கற்பனை தலைதூக்கும்
கணங்களிலெல்லாம்
காகிதத்தில்
தலைசாய்க்கிறது காதல் ..//
யதார்த்தம் சொன்னீர்
நன்றி நண்பி கருத்துக்கும் வருகைக்கும்
இதில் உள்குத்து இல்லைத்தானே கவிதை அழகு இறுதிவரி கனக்கின்றது
//தனிமரம் said...
இதில் உள்குத்து இல்லைத்தானே கவிதை அழகு இறுதிவரி கனக்கின்றது//
உள்குத்து ம் ம் ம் இல்லை நண்பா
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
Post a Comment