February 27, 2012
February 23, 2012
நிலாக் கடல் ( இறகு 02 )
முகத்தில் பட்ட நீர் துளிகள். தடவிப் பார்க்கப்பட்ட போது கை நனைக்கப்பட்டது. கை நீட்டினால் கைக்கெட்டும் தூரம் வரை மழையில்லை. முகத்திலிருந்த நீர் துடைக்க காதலி நீட்டிய தாவணி முனைபோல் வந்தது தென்றல். மறுபடி கால் நனைப்பு. காலுக்கடியிலிருந்த மணர்த்துகல்கள் இடம் பெயர்கின்றன. உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு சொல்லி விட்டன. பவணி வந்தவளின் பல்லழகு எங்கும் பால் வெளிச்சம். அது யார் வரைந்த ஓவியம் அழிக்கப்பட்டுவிட்டது. முன் வந்தவனை பின் தள்ளி ஓடி வந்து அழித்து விட்டுச் சென்று விட்டான். யார் அது இசை மீட்டுவது. பளிச்சென்று புகைப்படப்பிடிப்பு.தென்னோலைகள் நிலா வெளிச்சம் கடன் வாங்கி என்னை புகைப்படம் எடுத்தது. நான் நின்று கொண்டிருப்பது கடற்கரையில் அதுவும் பௌர்ணமிக்கடற்கரையில்.
எங்கும் நிசப்தம் இயற்கையின் சப்தம் மட்டும் சங்கீதம் பாடுகிறது. என்ன இசை இசை மைந்தர்கள் சங்கீதம் திருடிய இடம் இது. மனது எண்ணம் வரையும் போதே ஆமோதித்து பாடல் பாடியது சில்லுரி. மூச்சுவிடாமல் நீண்டதொரு பாடல் ராகம் தாளம் தெரியாத என்னால் ஏதோ ஒரு ராகம் புரியப்பட்டது. ஆடம்பரமில்லா அடித்தளமாய் கடலின் விசாலம். விலாசம் இல்லாத பலபேருக்கு வாழ்வு கொடுகிறது. உறுதியாகிறது தூரத்தில் ஒரு தோணி கடல் தடவி பயணிக்கிறது. எத்தனை அதிஷ்டசாலி அந்த மீனவன் இத்தனை அழகுக்குள்ளே அமைதியான அவனது வாழ்வு. நகர வாழ்வில் நசுங்கும் நாங்கள். எங்களின் காது வாகனசப்தங்களால் மறுத்து போய்விட்டன. எங்கள் மூச்சுக்களையும் பேச்சுகளையும் பார்வையையும் காசுக்காய் விற்று விட்டோம்.
ஏதோ தொலைத்து விட்டதாய் என் உள்ளம் உளரியது. உலகின் உள்ளங்கையில் எத்தனை அழகு. ஆம் இத்தனை நாளாய் ரசனையைத் தொலைத்து விட்டேன். இவ்வளவு நாளாய் எத்தனை இடங்களைத் தாண்டியிருப்பேன். அத்தனையையும் இந்த நவீனம் என்னிடமிருந்து பறித்து எடுத்ததாய் உணர்கிறேன். ஆழ் கடலின் அலைச் சப்தம் எனக்கு ஆறுதல் சொல்லியது. இது என் இடம் என்னைத்தவிர இங்கு வேறு மனிதரில்லை இங்கு நான் நானாய் இருக்கலாம். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை நான் யாரையும் கட்டுப்படுத்த தேவையுமில்லை.
என் கால்கள் இரண்டும் முழந்தாலிட கைகள் இரண்டும் மணல் தொட்டது . கடல் நீர் விரல் நனைக்க கடல் காற்று தலை தடவியது. மனதின் கணங்கள் இறக்கப் பட்டதாய் உணர்வு. என் வாழ்வில் வலி தொடும் வேளைகளில் இந்த கடல் தண்ணீரில் கண்ணீர் வடித்திருக்கலாமோ. அப்படி பலர் வந்து கண்ணீர் சிந்தியதாலோ உப்பு நீராகியது இந்நீர். என் நீரையும் உன்னோடு இப்போது சேர்த்துக் கொள். கண்ணீர் சிந்தினேன் வாழ்வில் முதன் முறையாய் நிம்மதியாய் கண்ணீர் சிந்தினேன். நிம்மதி இப்பொழுது நினைவுகள் மட்டும் மீதம் வலிகளை வடித்து விட்டேன்.
அப்படியே என் முகங்களை கடற்கரை மணலில் புதைத்தேன். அதன் வாசனையை என் நாசி உணரப்படும் அளவுக்கு புதைத்தேன். அமைதியாய் மூச்சடக்கி முழுமையாய் மண்ணில் படுத்தேன். என் பக்கத்தில் யாருமில்லை நான் மண்ணோடு ஒன்றி விட்டேன். அந்த நிசப்த நிமிடங்கள் எனக்கு மரணத்து மணிகளை ஞாபகமூட்டின. இப்படித்தான் முடியப்போகிறது ஒரு நாள் என் வாழ்வு இல்லை இல்லை எல்லோருடைய வாழ்வும். எத்தனை யதார்த்தம். எனக்கு வேறு எந்த மணித்துளியும் இந்த மணித்துளியை உணர்த்தவில்லை. ஒரு இயற்கையை இன்னொரு இயற்கையால்தான் உணர்த்த முடியும் உணரவும் முடியும்.
எழுந்தேன். சப்தமிட்டேன் என்னால் முடியும் வேண்டிய மட்டும் சப்தமிட என் சப்தம் தடுக்க முடியாது யாராலும். வைரமுத்துவின் கவிதைபோல் நான் இங்கு ஊர் வாயை மூடத் தேவையுமில்லை என் செவிகளை மூடத் தேவையுமில்லை. எனக்கு இந்த அமைதி தந்தது சுதந்திரம் இன்று. இந்த கடல் சாட்சியாய் எத்தனை நாடகம் நடந்து முடிந்தது அன்று. துப்பாக்கி வேட்டுகளாய் எவ்வளவு குருதிகள் ஒன்றிவிட்டன கண்ணீரோடு. கடற்கரை ஓரத்து சிவப்பு உயிர் மீட்டியது அவர்களது நினைவுகளை. மணற்துகள்களாய் அவர்களது நினைவுகள் அழிக்கப்படும் போது. இந்த கடற்கரை மணற்துகள்கள் அதை சேமித்து வைத்திருக்கின்றன.
கடலைகளே செவிமெடுங்கள் கற்றே கேள் என் கவிதைகளை உங்கள் முன் தூவுகிறேன். என் கவிஞனும் அப்படித்தான் தன் கவிகளை வயல் வெளிகளுக்கு ஒப்புவித்தான். நான் உங்களிடம். ஏனனில் அதை நான் உங்களிடமிருந்துதான் திருடினேன். காதலியிடமிருந்து திருடப்பட்ட அவளது இதயம் போல் எத்தனை முறை திருடினாலும் இனிக்கிறது.
February 14, 2012
யாசிக்கிறேன்
என் தோழியே
வாழப்பயப்படும் கோழை
நான் யாசிக்கிறேன்.
உணர்வுகள் இல்லா
உள்ளம் கொடு
கண்ணீர் சேமிக்கிறேன் .
பிரிவில்லா உறவு கொடு
வலிகள் சேமிக்கிறேன் .
கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன்.
நினைவுகள் மீட்டக்கொடு
நிஜங்களை மறுக்கிறேன்.
உண்மை நட்பு கொடு
வாழ நினைக்கிறேன்.
இல்லையேல்
மரணம் கொடு
நிம்மதியாய் உறங்குகிறேன்
வாழப்பயப்படும் கோழை
நான் யாசிக்கிறேன்.
உணர்வுகள் இல்லா
உள்ளம் கொடு
கண்ணீர் சேமிக்கிறேன் .
பிரிவில்லா உறவு கொடு
வலிகள் சேமிக்கிறேன் .
கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன்.
நினைவுகள் மீட்டக்கொடு
நிஜங்களை மறுக்கிறேன்.
உண்மை நட்பு கொடு
வாழ நினைக்கிறேன்.
இல்லையேல்
மரணம் கொடு
நிம்மதியாய் உறங்குகிறேன்
February 13, 2012
எதிர்பார்ப்பு
அன்புள்ள அன்புக்கு
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
எத்தனை முறை எழுதிவிட்டேன்
அன்பு என்ற சொல்லும்
தேய்ந்ததாய்த் தெரிகிறது
ஆனால் உன் அன்புதான்
வளர்ந்ததாய்த் தெரியவில்லை
நான் ஏதேனும்
வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
தொண்டை குழி பதபதக்க வார்த்தை பிழை விட்டேனோ ?
இலக்கணம் தவறினேனோ ?
எழுத்து எடாகுடமோ ?
எதுதான் நடந்ததோ ?
இத்தனையும் பேசிவிட்டு
மூச்சுவிட்டு நான் தரை பார்க்க
என் முகம் நீ பார்த்தாய்
குரலில் சிறு தென்றல் நடுங்க
நீ சொன்னாய்
கடிதம் வரைந்தது நீதானா?
கொடுத்தது நீ இல்லையே
எழுத்து பார்த்து
இலக்கணம் மதிப்பிட
நான் ஒன்றும் வாசகியல்ல
உன் அன்புக்காய் காத்திருந்த
காதலி
வார்த்தையில் பார்வையில்
மூச்சில் மனதில்
அத்தனையிலும் எதிர்பார்த்தேன்
வர்ணனை எழுத்தில் மட்டுமல்ல
வாழும் காலம் வரை
" நான் உன்னை காதலிக்கிறேன்"
February 08, 2012
நான் (தம்பனுரான்)
பள்ளி பருவம் முடித்து பேனை தொட்ட தருணங்களில். பல முறை பிரசவமான பல்வேறு படைபுக்களை கண் பார்த்து காது கேட்டு உள்ளம் எங்கோ எனை மறந்து. மூச்சடக்கி முக்கி எழுந்த கணங்களிலும். பல நூறு நூற்களில் நான் பார்த்தவை வெறும் எழுத்துகளல்ல காலம் நீந்திக் கடந்தவர்களின் பிரசவமே காகிதப் பெண்களுடன் பேனாவின் ஊடலால் ஏற்பட்ட பிரசவமே அந்த பிரசவக் குஞ்சுகள் கழுகுகலாகிப் பறந்த தருணங்களில் கோழிக் குஞ்சாய் பல முறை பறக்க முட்பட்டிருகிறேன் இப்பொழுதும் முற்படுகிறேன். கோடிகாலம் காத்திருந்து தேடிப்பிடித்த மனைவியை கட்டியணைப்பது போல பற்றி பிடித்துக் கொண்டேன் பேனாவை. ஊடல் கொள்ளும் தேடல் தளமாய் ஆக்கினேன் காகிதத்தை.
தொலைந்து போன தோழியையும் தேடிப்பெற்ற நண்பர்களையும் மறந்து போன காதலையும் கடந்து போன பள்ளியையும் காத்து நிற்கும் காலத்தையும் மீட்டி ஓட்டி பார்க்க நினைக்கிறன் பேனாவின் தோலிலேறி இல்லை இல்லை பேனாவை என் தோலிலேற்றி. வலித்தாலும் என் பாதம் முன் வைக்க முயலுவேன் முடியாத கதைகலேன்று மனது சொன்னவை முடிந்து விட்ட பதை என்று காலம் சொன்னவை இன்னும் எத்தனையோ மர்மதேச கதைகளாய் நீளும். நான் பேனா பிடித்து நடை பழகிய தருணங்களில் கை பிடித்து தூக்கிவிட்டவர் சிலரே " வேறு வேலை எதாவது செய் " என்று தூக்கி எறிந்தவர்கள் கணக்கில் அதிகம்.இன்னும் நான் பெரியவனாகவில்லை இலக்கிய பால் குடி மறவாத குழந்தையே .
February 07, 2012
எம் கணா ஒரு கணா
"மனிதனாய் பிறந்திட்டால் ஏதாவது செய்திடனும் அதுவும் வித்தியாசமா செய்திடனும் " எப்புடிங்க பஞ்ச் dialog . இல்லைங்க உண்மைக்கும் மேலே சொன்ன மாதிரி ஏதாவது வித்தியாசமா செய்யனும்டு நாங்களும் ஆசைப்பட்டோமுங்க . ஆசைப்பட்டதோட நிக்காம ஒண்டு செஞ்சமுங்க . என்னண்டா கேக்குறிங்க? அத சொல்லத்தானுங்க இந்த பதிவே .
அதாங்க short flime ( குறுந்திரைப்படம் ) அதன இது ஒன்டும் புதிசில்லையே நீங்க கேக்குறது புரிது ஆனா எங்க ஊர்ல இது வித்தியசம்தானுங்க நாங்க அறிஞ்ச வரைக்கும் யாரும் எங்க ஊர்ல இப்புடி ஒரு முயற்சி எடுக்கலைங்க . அதுவும் இருந்ததே கொஞ்சம் போல வளம் தானுங்க . ஆ ஒன்டு சொல்லனும் இந்த படத்துக்கு ஒருத்தர் இருக்காருங்க உண்மைலே இந்த கணா அவர்ரதானுங்க . அப்ப நீ என்ன செஞ்சண்டுதான கேக்குறிங்க புரிது புரிது அத நான் எப்புடிங்க சொல்லுவன் நீங்களே பாத்து கண்டுபிடிங்க.
சரி இந்த பதிவின்ட முக்கியமான காரணமே இது எங்கட முதல் முயற்சி மக்களே பாராட்டாடியும் திட்டி தீர்த்தாவது உங்கட கருத்துகள எங்களுக்கு வாலங்குவிகண்டு நம்புறம் pls சும்மா பாத்துட்டு மட்டும் போயிறாதிங்க. கூடிய சீக்கிரம் எங்கட முயற்சிய கொண்டு வந்து சேர்போமுங்க. மிச்சத்த Diractor manazeer சொல்லுவருங்க
அதாங்க short flime ( குறுந்திரைப்படம் ) அதன இது ஒன்டும் புதிசில்லையே நீங்க கேக்குறது புரிது ஆனா எங்க ஊர்ல இது வித்தியசம்தானுங்க நாங்க அறிஞ்ச வரைக்கும் யாரும் எங்க ஊர்ல இப்புடி ஒரு முயற்சி எடுக்கலைங்க . அதுவும் இருந்ததே கொஞ்சம் போல வளம் தானுங்க . ஆ ஒன்டு சொல்லனும் இந்த படத்துக்கு ஒருத்தர் இருக்காருங்க உண்மைலே இந்த கணா அவர்ரதானுங்க . அப்ப நீ என்ன செஞ்சண்டுதான கேக்குறிங்க புரிது புரிது அத நான் எப்புடிங்க சொல்லுவன் நீங்களே பாத்து கண்டுபிடிங்க.
சரி இந்த பதிவின்ட முக்கியமான காரணமே இது எங்கட முதல் முயற்சி மக்களே பாராட்டாடியும் திட்டி தீர்த்தாவது உங்கட கருத்துகள எங்களுக்கு வாலங்குவிகண்டு நம்புறம் pls சும்மா பாத்துட்டு மட்டும் போயிறாதிங்க. கூடிய சீக்கிரம் எங்கட முயற்சிய கொண்டு வந்து சேர்போமுங்க. மிச்சத்த Diractor manazeer சொல்லுவருங்க
இறகு 1
குருவியிலிருந்து முதன்முதலாய் விழுந்திருக்கிறது இறகு ஒன்று
அதுவும் ஒரு நினைவு தாங்கியே விழுந்திருகிறது. நல்ல வேலை அது விழுந்த இடம் குருவிக்கூடு அதை நான் பத்திரப் படுத்துகிறேன்.
வந்த இருளும் நாளை விடியும் . கடந்த பள்ளி நாட்கள் மீண்டும் மீளா. அந்த இரவின் அடையாளமாய் இலையில் தங்கிய பனித்துளி போல் அதன் நினைவுகள் மட்டும் மனதில் ஒட்டி இருகின்றது . எனக்கு மட்டும் அல்ல பள்ளி பருவம் தாண்டிய அநேகருக்கு அதன் ஈரம் இன்னும் இருக்கும் .
நிதானமாய் நிம்மதியாய் கண்மூடி. அந்த பழைய பள்ளிக்கு போகின்றேன். வேப்பமரக்காத்து, அதன் ஒற்றை கந்தில் தொங்கும் ரயில் தண்டவாலத்து மிச்சம் எங்கள் பள்ளி மணி, அதோ எனது வகுப்பறை அப்படியே இருக்கிறது எனது மேசையும் நட்காளியும் அதில் இன்னமும் இருக்க வேண்டும் எனது அடையாள குறியீடு . இதோ இங்குதான் நாங்கள் பாடத்தோடு வாழவும் கற்றோம்.
தோள் சாயத் தோழர்கள், தோள் தடவும் நண்பிகள், எனக்கேன்றே ஒரு பிறப்பு என் தோழன், என் முதல் ரசிகை என் தோழி, வழி வகுத்த ஆசான்கள் (வழி மறித்த ஆசான்களும் ), என்றுமே ருசியில்லா ஒரு வகை ருசியுடன் கேண்டின் சாப்பாடு , செம்மண் அள்ளி வீசும் மைதானம், பகல் நேர வகுப்புக்கு நிழல் தரும் மா மரம் , நான் தலைவனாய் மார் தட்டிய மாணவர் மன்றம் ,.கடைசியாய் அவளை பார்த்த காலை கூட்டம்
அதுவும் ஒரு நினைவு தாங்கியே விழுந்திருகிறது. நல்ல வேலை அது விழுந்த இடம் குருவிக்கூடு அதை நான் பத்திரப் படுத்துகிறேன்.
வந்த இருளும் நாளை விடியும் . கடந்த பள்ளி நாட்கள் மீண்டும் மீளா. அந்த இரவின் அடையாளமாய் இலையில் தங்கிய பனித்துளி போல் அதன் நினைவுகள் மட்டும் மனதில் ஒட்டி இருகின்றது . எனக்கு மட்டும் அல்ல பள்ளி பருவம் தாண்டிய அநேகருக்கு அதன் ஈரம் இன்னும் இருக்கும் .
நிதானமாய் நிம்மதியாய் கண்மூடி. அந்த பழைய பள்ளிக்கு போகின்றேன். வேப்பமரக்காத்து, அதன் ஒற்றை கந்தில் தொங்கும் ரயில் தண்டவாலத்து மிச்சம் எங்கள் பள்ளி மணி, அதோ எனது வகுப்பறை அப்படியே இருக்கிறது எனது மேசையும் நட்காளியும் அதில் இன்னமும் இருக்க வேண்டும் எனது அடையாள குறியீடு . இதோ இங்குதான் நாங்கள் பாடத்தோடு வாழவும் கற்றோம்.
தோள் சாயத் தோழர்கள், தோள் தடவும் நண்பிகள், எனக்கேன்றே ஒரு பிறப்பு என் தோழன், என் முதல் ரசிகை என் தோழி, வழி வகுத்த ஆசான்கள் (வழி மறித்த ஆசான்களும் ), என்றுமே ருசியில்லா ஒரு வகை ருசியுடன் கேண்டின் சாப்பாடு , செம்மண் அள்ளி வீசும் மைதானம், பகல் நேர வகுப்புக்கு நிழல் தரும் மா மரம் , நான் தலைவனாய் மார் தட்டிய மாணவர் மன்றம் ,.கடைசியாய் அவளை பார்த்த காலை கூட்டம்
இன்னும் நினைவுக் கடலில் முடிவில்லாமல் நீந்த எத்தனையோ பசும் நினைவுகள் . குருவிக்கூட்டில் இறகு ஒன்றாய் சேமிக்கப்படுகிறது.
February 06, 2012
ஆசைபடுகிறேன்
கால நகர்வில் மனிதன் வேலைபலுவினால் தாம் மிகவும் விரும்பும் சில விடயங்களை செய்ய முடியாமல் போகலாம். அது போலவே எனது இந்த பதிவு எழுதுவதும் சில பல காரணங்களால் தூரமகியது மீண்டும் காதலர் மாதம்தனிலே எனது மீள் வருகையை புதுப்பித்து கொள்கிறேன்.
நான் நினைப்பதை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த பதிவுலகம் உள்ளதன எனக்கு உணரவைத்த ( நான் முதன்முதலாய் பார்த்த பதிவுத்தளமும் ) என் நண்பன் பவனுக்கு இந்த குருவிக்கூடு என்றும் நன்றி உரைக்கும் . இனி இந்த குருவி கொண்டு வரும் பதிவு எனும் சருகுகளால் . என் குருவிக்கூடு. கட்டப்படும் . நீங்களும் இக்குட்டில் அமர்ந்து உம் கருத்து சொல்லி செல்வீர் என இந்த உள்ளம் எதிர் பார்கிறது .
Subscribe to:
Posts (Atom)