fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

May 13, 2012

அன்னை அன்பு


மனிதம் தொலைத்து
மானிடம் அலையுமென்று
ஆதி இறைவன்
அடிக்கணக்கு போட்டு வைத்தான்.
தொலைத்த மனிதம்
தோண்டி எடுப்பதற்காய்
அன்பின் வடிவில்
அன்னையை அனுப்பி வைத்தான்.
சோதனைக்களம்
கண்டு விளையாட
பிள்ளையும் பிறக்க வைத்தான்.
அன்னை அன்பு
உலகம் பரவ
மனிதன் கழகங்கள்
அமைத்து வைத்தான்.
தோல்வித் தண்ணீர்
முகத்தில் பட்டு
அன்னை அமைவிடமாய்
முதியோர் இல்லம்
மனிதன் அமைத்து வைத்தான் .

Related Posts Plugin for WordPress, Blogger...