fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

August 26, 2015

ஹைக்கூ நீ - குறும்படம்


சில்லென மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க  ஒரு கதிரையில் நான் என் வலக்கரத்தில் தேனீர் எனது இடது தொடையின் மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள் அவளது கூந்தல் நனைந்த வாசம் முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும்.

அலைபாயுதே, சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி இன்னும் இருக்கு போன்ற படங்கள் தந்தது  போன்ற ஒரு உணர்வை  ஹைக்கு குறும் படம் பார்த்த போது உணர்ந்தேன்.

3 நிமிசத்துல ஒரு கப் cofee  என்  காதலி குடிக்கனும்டு தோணிச்சு அந்த உதட்டுல  இருக்குற  கடைசி சொட்டு  எனக்குத்தாண்டு  தோணிச்ச. என் bedroom ல pillow fight நடக்கனும்டு தோணிச்சு அதுக்கப்புறம் romantic பன்னனும்டு தோணிச்சு

உண்மைதாங்க

“The best feeling is falling in Love The craziest experience is making love”

காதல் நிறைய தமிழ் சினிமாட கருப் பொருள்தான் ஆனால் அது சொல்லப் படும் விதத்தில் தான் அதன் அழகும் வெற்றியும் தங்கி உள்ளது. காத்திருத்தல் காதலில் நிறையவே சாத்தியமான ஒன்று அதுதான் ஹைக்கு நீ குறும் படத்தின் கருப் பொருள்.

waiter ரோடு சேர்த்து நான்கு கதப்பத்திரங்கள் அவர்களின் பங்கை நன்றாகவே செய்திருக்கின்றார்கள் காட்சிகள் அழகு.


சூர்யா நாராயணன் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள் அருமையான படைப்பு நீங்கள் சினிமாவுக்குள் வந்து இது போன்ற முழு நீல படைப்புகளை வழங்க வேண்டுகிறோம்

குறும் படத்தை பார்வை இட


August 10, 2015

மெஹர் - விஜய் சித்திரம்


விஜய்  சித்திரம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதுமைகளை ஏற்படுத்திய புதிய நிகழ்ச்சிகளை படைத்த விஜய் தொலைக்காட்சியின் புதிய முயற்சி இதற்கான விளம்பரங்களும் முன்னோட்டங்களும் வரும் போதே எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது இந்த முன்னோட்டங்களை பார்த்ததும் என் முகப்புத்தகத்தில் இப்படி பதிவிட்டிருந்தேன்    “நீண்ட நாள் மனதில் இருந்த ஆசை .. ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும் போதும் அந்த அந்த காதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து பார்க்கும் நான் . நான் வாசிக்கும் புத்தகங்கள் காட்சியாக சினிமாவாக வர வேண்டும் என எதிர் பார்த்திருக்கிறேன் . அந்த ஆசை கனவு விஜயசித்திரம் எனும் vijay tv யின் நிகழ்ச்சி மூலம் நிறைவேற போகிறது என நினைக்கிறேன்


என் எதிர் பார்ப்பு வினாகவில்லை விஜய் சித்திரத்தின் முதலாவது படைப்பு மெஹர் இப்பொழுதும் சொல்கிறேன் நாவல் வாசித்தது போல ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிக்கிறது பசீர்,முதலாளி,ஜெஸ்மின்,காதர்,சின்னையா என எல்லாமே எதார்த்தமான நடிப்பு மொழி வழக்கு
சீதனம் பற்றி எவ்வலவோ பேசி இருக்கிறோம் போராடி இருக்கிறோம் உயிரின் ஆழம் தொட்டு சீதனம் சம்பந்தம்மாய் இஸ்லாம் சொன்னதை கோடிட்டு காட்டுகிறது இந்த மெஹர் இறுதி வார்த்தை உண்மையாக வேண்டும்இஸ்லாத்தை பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக உள்ளது”

இஸ்லாமிய முறைப்படி ஒரு மனமகான் மணமகளுக்கு மஹர் எனும் அன்பளிப்பு கொடுத்து வலிமா எனும் மனவிருந்தும் கொடுத்துதான்  முடிக்க வேண்டும். அது போலவே மற்ற மதங்களும் கூறி இருக்கலாம் .
அதை விட்டு விட்டு தனது ஆண்மையை விற்கும் விபச்சாரிகள் போல் தனது படிப்புக்கும் தொழிலுக்கும் ஏற்ப சீதனம் நிர்ணயிப்பவர்களுக்கு இந்த மெஹர் ஒரு செருப்படி
இதில் இந்த சீதனம் மட்டும் அல்ல ஏழை பெண்களின் கனவு கஷ்டம் பேருக்காய் ஹாஜிகலாபவர்களின் உண்மை தன்மை நிறையவே . நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் நன்கு அறிவேன் கடன் வாங்குவதின் கடினம் மனிதத்தின் தன்மைகளை.


கிட்டத்தட்ட என் உம்மா இறையடி சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆக போகின்றது. இந்த பஷிரின் உம்மாவைப் போலத்தான் என் உம்மாவும் ஹராம் ஹலாளில் நிறைய பக்குவம் சொல்லி கொடுத்தார்கள். இன்று தலை நிமிர்ந்து வாழ சொல்லி கொடுத்து விடை பெற்றார்கள். நிறைய விதத்தில் இந்த மெஹர் என் மனதுக்கு பக்கத்தில் நின்கிறது இந்த படைப்பு நண்பர்கள் கட்டாயம் பார்க்கவும்


படைப்பை பார்க்க 


Related Posts Plugin for WordPress, Blogger...