fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

July 23, 2011

மரணம்

மரணம்
வாழ்க்கைக்கான
முற்றுப்புள்ளியானால்
நானும் தயார் சுவைக்க.
என் வாழ்கையை
வரைந்த பிறகு.
ஒவ்வொரு முறையும்
என் எண்ணங்கள்
மறுக்கப்படும் பொழுது
இறந்தே பிறக்கிறேன்.
பேனா கூர் முனையால்
வெள்ளைக் காகிதத்தில்
பேனையின் வருடல்
காவியம் படைபதுக்கென்றல்
நானும் தயார்.
பெரிய வெற்றிகேன்றால்
நானும் தயார்.
ஆனால் வாழ்வே
இலக்கிய திருட்டுக்கான
பேனா போல்
வலிகளால் நிரப்பப்பட்டால்
மரணமும் தொடர்கதைதான்.

July 17, 2011

முதல் அடி

இன்றுதான் எனது முதல் பதிவின் பிரசவம் . இனி தடவி தடுமாறி என் பதிவுகள் இங்கு அரங்கேறும். தம்பனுரில் இப் பார் கண்டேன். வரலாற்றை
சொல்லும் பொலன்னாறுவைக்கு வடகிழக்கே 14KM நோக்கி சென்றால் . என் தாய் மண் வாசம் வீசும். பெரிய வரலாறில்லை ஆனால் நிறைய வரலற்றை படித்தவர் இங்குண்டு.பச்சை வயல்களில் பாடுபடும் கரங்கள் கணக்கில் அதிகம். ஊருக்கு 2 பள்ளிகூடம் 3 பள்ளிவாயல் இவைதான் எம் ஊருக்கான தூண்கள். அங்கே பிறந்து வாழந்து இப்போது திருகோணமலையில் HNDIT படித்து கொண்டிருக்கிறேன் நான். இங்கு வந்துதான் கணணி உலகே எனக்கு அறிமுகமானது. இப்போது இப் பதிவின் மூலமாக நான் உங்களிடத்தில் அறிமுகமாகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...