காலம் என்பது எவ்வளவு வேகமாக
ஓடி விடுகிறது அது யாருக்காகவும் எப்போதும்
காத்திருப்பதில்லை அதோடு சேர்ந்து எப்படியாவது
ஓடி விட வேண்டும் என்பதுதான்
நியதி வேகமாக ஓடுபவன் வெற்றி
பெறுகிறான் காலத்தோடு ஓட முடியாதவன் வெற்றிக்காய்
காத்திருக்க வேண்டி இருக்கிறது .
சரியாக
ஓராண்டுக்கும் மேலானா காலத்துக்கு பிறகே
எனது குருவிக்கூட்டின் பக்கம் வரக்கிடைத்திருக்கின்ரது.. இந்த இடைப்
பட்ட காலம் எனக்குள் பல
மாற்றங்களை கொண்டு வந்தது . நிறைய
வலிகளை கொடுத்தது தொலைதூரம் கொண்டு வந்தது கண்ணீர்,
வலி ,பிரிவு ,சிரிப்பு ,அன்பு
, காதல் ,தனிமை இவற்றை தன்னோடு
கூட்டி வந்தது.
எங்கோ என் நாட்டை விட்டு
தொலை தூரம் வந்து என்னை
தேடுகிறேன். எழுத்தோடு இனைய வேண்டும் அந்த
காதல் மீண்டும் வேண்டும் நான் நானாக இருக்க
என் நினைவுகளின் வழியே பயணிக்க என்
தனிமையை துணையாக்க
அதற்காக
நேரத்தோடு சண்டை போட போகிறேன்.
இயந்திர வாழ்க்கைக்கும் இயற்கை கற்பனைக்கும் இடையில்
பாலைவனத்தில் இருந்து என் குருவிக்கூட்டுக்கு
இறை தேட போகிறேன் . ஏற்கனவே
நான் ரசித்தவைகளை நான்ரசித்தவை என்ற வலை தளத்தில்
கோர்க்கிறேன் இனி குருவிக்கூட்டில் என்
பதிவுகளுடனும்