ஒரு தொழிலை நாம் விட்டு
வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு
இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான்
இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள்
அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு
கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான்
என எண்ணத் தோன்றுகிறது.
நான் எனது தகவல் தொழில்
நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த
பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது.
அதற்காக எனது நண்பர்கள் எல்லாம் அரச காரியாலயங்களை தெரிவு செய்ய .நானும் சொந்த ஊருக்கு
(polonnaruwa) திரும்பி இருந்தேன் அரச காரியாலயங்களில்
இடம் தேட.
அந்த நேரத்தில் எனது சிரேஷ்ட (senior ) சகோதரியிடம்
இருந்து வந்த அழைப்பின் பெயரால்
மீண்டும் நான் கல்லூரில் கல்வி
கற்ற திருகோணாமலை நகரத்தில் உள்ள இலங்கையின் மிக
முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்களில்
ஒன்றான Esoft Metro Campus நிறுவனத்துக்கு
நேர்முகப் பரீட்சைக்கு சென்றேன். இந்த இடத்தில்
ஒரு விடயம் ஞாபகப் படுத்தப் பட வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால்
Esoft ,ICBT ,BCAS ,IBS போன்ற நிறுவனங்களில்
கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த
நிறுவனங்களில் ஏதும் எமது மாவட்டத்தில் அந்த நேரத்தில் காணப் படவில்லை ஆகவே வெளியூர்
சென்றுதான் கற்க வேண்டும் அதற்கான செலவுகள் அதிகமாக கணப் பட்டமை இரண்டாவது இந்த மாதிரியான
தனியார் நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என எண்ணியமை ( அது இல்லையென பின்னாட்களில்
புரிந்தது)
இப்படி
நாம் படிக்கவே முடியாது என எண்ணிய இடத்தில்
விரிவுரையாளருக்கான நேர்முக பரீட்சைக்கு வந்திருப்பது
எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு நேராக சொந்த ஊரில்
இருந்து வந்து இரங்கி திருகோணமலையின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு எதிரில்
அமைந்து உள்ள NSB BUILDING என அழைக்க பட்ட
கட்டிடத்தில் இரண்டாவது மாடிக்கு ஏறினேன். நிறையவே தைரியம் இருந்தது
காரணம் அதற்கு முதல் நாளே
எனது சிரேஷ்ட மாணவியிடம் call
பண்ணி ஆயிரம் கேள்விகள்
கேட்டாகி விட்டது ஏன் என்றால்
அவரும் அங்கேதான் வேலை பார்க்கிறார்.
கண்ணாடி கதவு திறந்து
உள் நுழைந்ததும் வாரவேட்பரையில் ஒரு பெண் good morning என்றார் பதிலுக்கு நானும்
good morning சொல்ல . sir நீங்க interview குதனே வந்து இருக்கிங்க உள்ள போங்க இதான்
manager room என எதிரில் இருந்த room ஐ காட்டினால். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன் youtube ,google அனைத்திலும் தேடிய How to face
interview மனதிற்குள்ளே ஓடியது இதுதான் நான் தகவல் தொழில் நுட்பம் கற்ற பின்பு சந்திக்க
போகும் முதலாவது நேர்முகப் பரீட்சை.
Excuse me may
i coming என்ற வாசகத்துடன் உள் நுழைய Yes, Coming என்று வரவேற்றார் அன் நிறுவனத்தின்
முகாமையாளர் Dewananth Kumarakurunathan .
நீங்கதான fasni cv தாங்க பாப்பம் என தமிழிலே ஆரம்பித்தது புது
தெம்பை எனக்கு வழங்கியது பின்னர் சில கேள்வி விடை என நேர்முகப் பரீட்ச்சை இறுதியாய்
சொன்னார் எல்லாம் ok நாளைக்கு வந்து class
ஒன்டு எடுங்கோ மாணவர்களில் feedback ஐயும் நீங்க எப்படி class எடுக்கிறிங்க என்டுரத்தையும்
பொறுத்தே Result . எல்லா Class உம் English லதான் ஆனா நீங்க படிப்பிக்க போற பிள்ளையள்
சிங்களம் எண்டுரதால சிங்களத்தாலதான் விளங்க படுத்த வேனும் ok seeyou
என விடை கொடுத்தார்
ஆம் என தலையாட்டி
வெளியே வந்தேன். ஒரே ஒரு குழப்பத்துடன். சிங்களம் என் தாய் மொழி அல்ல ஆனால் என் ஊர்
வாழ்த்த சமூகம் பழகிய நண்பர்களின் பொருட்டால்
சிங்களம் தெரியும் ஆனால் சிங்களத்தில் கற்பிக்க கூடியலவு இருக்குமா என்ற சந்தேகமே
... என்ன ஆனது அடுத்து அடுத்த தொடரில்