தலை சாய்த்து
கண்ணயரும் பொழுதுகளில்
வரும் கணாக்கள்
அதில் நீ வந்தால்
கொள்ளை பிரியம் எனக்கு
அன்றொரு நாள்
செவ்வானச் சிதறல்களின்
கீழிருந்து
சில்லுகள் சேமிக்கிறேன்
காற்றலுத்தம் அதிகமாகி
சில்லுகள் சிதறின.
காலத்தை பற்றி இழுக்கிறேன்
அது எனை எட்டி உதைக்கிறது.
ரோஜா இதழ்கள் புசிக்கிறேன்
அதிலும் முட்கள் முளைகின்றன
நாட்கள் எண்ணி உறவுகள்
மனங்களுக்கு மதிப்பில்லை
ஊருக்காய் புன்னகை
உள்ளுக்குள் பூகம்பம்.
இவை ஏன் என் கணாக்களில்
நீ எனை விட்டு போகிறாயா?
நிஜங்கள் துறந்து
நிழல்களோடு நீ பயணிக்கிறாய்
உறவுக்காய் போகிறாயா?
போ
உனக்காய் ஓர் உறவு
உறவின்றி நிற்கிறது
எப்போதவது திரும்பி பார்
அப்போதும் என் கண்ணில்
விழுவது உன் விம்பமே
இப்போதும் சிரிக்கிறேன்
கணாக்களில்
காரணம் நீ தான்
6 comments:
எங்கேயோ போய்டிங்க!!!!காதல் காதல் காதல்...
மிகவும் ரசித்தேன் ... காதல் கொட்டிக்கிடக்கிறது இங்கே..
என் தளத்திலும் உங்களை வரவேற்க்கிறேன்..
Super
//கா. செந்தூரன் said...
எங்கேயோ போய்டிங்க!!!!காதல் காதல் காதல்...//
அன்பின் ஒரு வடிவமே காதல் ..... இங்கு காதலைவிட அன்பு இருக்கும்
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
//Mathi said...
மிகவும் ரசித்தேன் ... காதல் கொட்டிக்கிடக்கிறது இங்கே..
என் தளத்திலும் உங்களை வரவேற்க்கிறேன்..//
நிச்சயம் வருகிறேன்
நன்றி நண்பி வருகைக்கும் கருத்துக்கும்
//Nancy Mano said...
Super//
thx akka
Post a Comment