fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

March 24, 2012

காரணம் நீ தான்





தலை சாய்த்து
கண்ணயரும் பொழுதுகளில்
வரும் கணாக்கள்
அதில் நீ வந்தால்
கொள்ளை பிரியம் எனக்கு

அன்றொரு நாள்

செவ்வானச் சிதறல்களின்
கீழிருந்து
சில்லுகள் சேமிக்கிறேன்
காற்றலுத்தம் அதிகமாகி
சில்லுகள் சிதறின.

காலத்தை பற்றி இழுக்கிறேன்
அது எனை எட்டி உதைக்கிறது.

ரோஜா இதழ்கள் புசிக்கிறேன்
அதிலும் முட்கள் முளைகின்றன

நாட்கள் எண்ணி உறவுகள்
மனங்களுக்கு மதிப்பில்லை
ஊருக்காய் புன்னகை
உள்ளுக்குள் பூகம்பம்.

இவை ஏன் என் கணாக்களில்
நீ எனை விட்டு போகிறாயா?

நிஜங்கள் துறந்து
நிழல்களோடு நீ பயணிக்கிறாய்
உறவுக்காய் போகிறாயா?
போ

உனக்காய் ஓர் உறவு
உறவின்றி நிற்கிறது
எப்போதவது திரும்பி பார்
அப்போதும் என் கண்ணில்
விழுவது உன் விம்பமே

இப்போதும் சிரிக்கிறேன்
கணாக்களில்

காரணம் நீ தான்  

6 comments:

chenthoo said...

எங்கேயோ போய்டிங்க!!!!காதல் காதல் காதல்...

எஸ்.மதி said...

மிகவும் ரசித்தேன் ... காதல் கொட்டிக்கிடக்கிறது இங்கே..
என் தளத்திலும் உங்களை வரவேற்க்கிறேன்..

Unknown said...

Super

fasnimohamad said...

//கா. செந்தூரன் said...
எங்கேயோ போய்டிங்க!!!!காதல் காதல் காதல்...//

அன்பின் ஒரு வடிவமே காதல் ..... இங்கு காதலைவிட அன்பு இருக்கும்
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

fasnimohamad said...

//Mathi said...
மிகவும் ரசித்தேன் ... காதல் கொட்டிக்கிடக்கிறது இங்கே..
என் தளத்திலும் உங்களை வரவேற்க்கிறேன்..//

நிச்சயம் வருகிறேன்
நன்றி நண்பி வருகைக்கும் கருத்துக்கும்

fasnimohamad said...

//Nancy Mano said...
Super//

thx akka

Related Posts Plugin for WordPress, Blogger...