fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

March 05, 2012

உயிர்த் தோழியும் தோழனும்

ஒரு நண்பன் படும் துயரம் கண்டு . அவனது உயிர் தோழி. அவளது வாழ்வில் முதன்முறையாய் கவிதை நெய்கிறாள். அதுவும் அவளது தோழனுக்காய்

 வேதனை


எவ்வளவு கொடுமையானது
எவ்வளவு கஷ்டமானது
ஏன் உன்னை சேர்ந்தது
ஓ......... எனக்கு புரிந்து விட்டது
அந்த வேதனைக்கும்
உன்னை பிடித்து விட்டது போல
உன்னை பிடித்தவர்கள்
மனிதர்கள் மட்டும் தான் என நினைத்தேன்
ஆனால் இன்றுதான் தெரியும் இவற்றுக்கும் உன்னை பிடிக்கும் என்று.
உன் வேதனையில் முதன்மை வகிப்பது நான் தான் .
என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்
நான் உன் வாழ்வில் வந்திருக்காவிட்டால்
இவ்வளவு வேதனை உனக்கு வந்திருக்காது
ஆனாலுன் இதை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் .
ஆனால் இது தான் உண்மை தோழா.


நான் அந்த இறைவனிடம் உனக்காக கேட்பது
உன் வேதனையில் அரைவாசியாவது எனக்கு தர வேண்டும் என்று ;

நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று கேட்பேன் செய்வாயா?
?
?
?
?
?
?
என்மேல் வைத்திருக்கும் அன்பை குறைத்து விடு,
அப்பொழுதாவது உன்னை சூழ்ந்திருக்கும் வேதனையில்
சிறிதளவாவது குறைந்து விடும் நண்பா
உன் நண்பிக்காக
உன் நண்பியின் திருப்திக்காக











  இக்கவியை வாசித்த தோழனோ அழவில்லை மாறாக சிரிக்கிறான். அவளுக்காய் அவனும் கவிதை வரைகிறான். இக்கவிதையில் உவமை இருக்காது உணர்வு இருக்கும்

வாக்கு 







என் உயிர் தோழியே !
வேதனை கொடியதுதான்.
அதை நான் இப்பொழுது நேசிக்கிறேன்.
எனக்காய் என் தோழி
வார்த்தை கோர்த்து
கவிதை நெய்தாள்.
அக்கவியின் ஒவ்வொரு வரியிலும்
அன்பை சொரிந்தாள்
நீ என் வேதனையா
யார் சொன்னது
வாய்மூடு  தோழி
வேதனையும் வேதனைப்படும்.
எனக்கும் உனக்கும் உள்ளது
அன்பு தூய்மை அன்பு
அதை எடை போட மாட்டேன் நான்
வாக்குத்தருகிறேன்
உன் மீதுள்ள அன்பை குறைகிறேன்
எப்போதனில்
என் விலா எழும்பு மக்கும் போது.


                                                                                          இது கற்பனையல்ல
                                                                              

2 comments:

Anonymous said...

தோழமையும் தோழியும் வாழ வேண்டும்

fasnimohamad said...

// irfan zarook said...
தோழமையும் தோழியும் வாழ வேண்டும்//

நன்றி நண்பா எனக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த கவிதை ....... என் தோழியை போல் அழகானது

Related Posts Plugin for WordPress, Blogger...