fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

April 16, 2012

இதுவரை நான்


வாழ்கையில் நான் செய்யும் உருப்படியான காரியங்களில் ஒன்று இந்த வாசித்தல் பல்வேறு தருணங்களில் என் உணர்வுகளை புத்தியை தீட்டும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு. நல்ல புத்தகங்கள் நல்ல  நண்பன் என் தனிமைகான துணை நான் வாசித்து ரசித்த புத்தகங்களை உங்களுடன் பகிர்கிறேன் புத்தகக்கடையில் சேமிக்கிறேன்  

                                              இதுவரைநான்
எனது கவிஞனின் நூல் ஆம் கவிப்பேரரசு வைரமுத்துவை எனது கவிஞன்  என சொல்வதில் பெருமிதம் எனக்கு அவரது வரிகள், புத்தகங்கள் மீது தீரக் காதல் எனக்கு. என் கவிஞன் தன்னைப் பற்றி எழுதிய புததகமே இதுவரை நான்

தலைப்பை பற்றி இப்புத்தகத்தின் ஆசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்
இதுவரைநான் எனும் இந்தப் படைப்பு சுயசரிதம் அன்று எனக்கு சுயம் உண்டே  தவிர சரிதம் கிடையாது 
எத்தனை  அடக்கமான பேச்சு இது உங்கள் தன்னடக்கம் வைரமுத்து ஐயா நீங்கள் எமக்கு என்றுமே சரிதம்தான்

இந்த புத்தகத்தில் கவிப்பேரரசு பிறப்பு தொடக்கம் அவரது முதல் பையன் பிறப்பு வரையிலான விடயங்களை  அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக தந்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் வாழ்கையின் எதார்த்தம் சொல்கிறது

இந்த புத்தகம் பற்றி கவிப்பேரரசு கடைசியாய் சொல்கிறார்
இது 
சுயம் தேடியலைந்த 
ஓர் இளைஞனின் சுயசரிதை 
எழுதப்பட்ட போது வயது இருபத்தியெட்டு    

இந்த புத்தகம்  வாசித்து முடித்த பின்பு என் மீதும் என் வாழ்வு மீதுமான நம்பிக்கையின் பெறுமதி இன்னும்  அதிகமானது

இதுவாரை நான் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...