ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச் சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்
நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்
ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்
கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
3 comments:
அருமையான கவிதை
வரிகள் என்னை கவிதை படிக்க தூண்டுகிறது
உன் வரிகள் நிச்சயம் பேசும்
//manazeer masoon said...
அருமையான கவிதை
வரிகள் என்னை கவிதை படிக்க தூண்டுகிறது
உன் வரிகள் நிச்சயம் பேசும்//
உங்கள் கருத்துகளே எனக்கு பலம்
நன்றி நண்பா
யாதார்த்தம் இது தானே ..
Post a Comment