fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

April 22, 2012

பேதை மகள்



ஒழுகுற வீடு ஒன்டுதான்
எங்களோட சொத்து
பள்ளிக்குச்  சென்று படி
காகிதப்பூ தலையில சூடாத
மல்லிகை பூ நான் பாக்கன்
பெத்த மகளை அனுப்பி வச்சான்
சொத்தில்லா அந்த அப்பன்

நல்லாத்தான் படிச்சா அவள்
பாடத்தவிட அவன
அவன்ட கை பிடிச்ச போதையில
பள்ளிக்கூடம் தனை மறந்து
பாதையிலே திரிந்திருந்தாள் பேதை மகள்

ஆத்தி மகன் வேலைக்காய்
கொழும்புக்கு சென்றவன்
கூத்தி மக்கள் சகவாசம்
களித்து விளையாட தலை விட்டான்

கை பிடிச்ச தலை மகன்
கரம்பிடிக்க வாருவான் என்று
ஏங்கித் தவிக்கிறாள்
மடியில் நீர் துளிகள்
விட்டு ஓட்டை பார்க்கிறாள்
அதில் மாற்றம் இல்லை
மன ஓட்டை மட்டும் பெரிதானது
 
 

3 comments:

Anonymous said...

அருமையான கவிதை
வரிகள் என்னை கவிதை படிக்க தூண்டுகிறது
உன் வரிகள் நிச்சயம் பேசும்

fasnimohamad said...

//manazeer masoon said...
அருமையான கவிதை
வரிகள் என்னை கவிதை படிக்க தூண்டுகிறது
உன் வரிகள் நிச்சயம் பேசும்//

உங்கள் கருத்துகளே எனக்கு பலம்
நன்றி நண்பா

எஸ்.மதி said...

யாதார்த்தம் இது தானே ..

Related Posts Plugin for WordPress, Blogger...