இந்த நாட்டு மக்களின் பெருன்பான்மையானோரை பயத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் அதாவது கிரீஸ் மனிதன் யார் என்ற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு இன்று மக்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் அளவுக்கதிகம் மக்களின் தோழன் எனப்படும் பாதுகாப்பு படையீனர் இன்று மக்களின் எதிரிகளாக நோக்கப்படுகின்னறனர் என்பதற்கு நாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, கண்டி,பொலன்னருவ போன்ற பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவமும் கிண்ணியா சம்பவமும் காரணம் காட்டி நிற்கின்றன.
இந்த மர்ம காடையர்களின் பிரதான நோக்கம் பெண்களாக இருப்பதால் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்த சில பெண்பிள்ளைகளும் பயத்தினால் சொந்த ஊர் திரும்பிவிட்டனர் ஆனால் கல்லூரிகள் வழமைபோல் நடைபெறுகின்றது அவர்களது கல்வியின் நிலைக்கு யார் பொறுப்பு. இது வரையும் நாடு அறிந்தளவு அரசாங்கம் எந்தவொரு பாரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை . மக்களாக முனைந்து பிடித்து கொடுத்த காடையர்களில் சிலரும் பல்வேறு காரணம் காட்டி விடப்பட்டனர் இனியும் அரசாங்கம் மெளனம் காக்குமேயானால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்புபடையீனர் மீதும் நம்பிக்கையீனம் அதிகரிக்கலாம் .உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு எதிர்பாராத வேளையில் தோன்றி மறையும் இவர்கள் யார்? எதற்காக பெண்களை மட்டும் தாக்கவேண்டும்.? நாடு முழுவதும் ஒரே தடவையில் உலாவரும் இவர்கள் எத்தனை பேர்? எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? இவையே இன்று மக்களின் சந்தேகம்.
ஆகவே இவ்விடயம் வெறும் வதந்தியாக இருந்தால் இது தொடர்பான விழிப்புணர்வையும் உண்மையாயின் இதை அழிப்பதற்கான நடவடிகையையும் அரசாங்கம் எடுப்பது அவசியமாகிறது
0 comments:
Post a Comment