fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

June 08, 2023

பிரவாசியிண்ட ஜீவிதம்

 மலையாள சினிமாவும் கதையும் கதை மாந்தர்களும் எமது வாழ்வோடு நாம் சந்திக்கும் மனிதர்களோடு ஒன்றிப்போவதால் என்னமோ எனக்கு மலையாள சினிமா மீது அலாதி பிரியம். சில படங்கள் மனதோடு சேர்த்து கண்களையும் நிறைத்து விடும் அப்படிதான் நான் அண்மையில் பார்த்த


"Kadina Kadoramee Andakadaham"  திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகி போனது கிட்டத்தட்ட ஒரு தசாப்பதம் கடல்தாண்டி எனக்கு கழிய போகிறது இத்தனை காலம் இந்த நாட்டில் நாடுவிட்டு வந்த நாடோடிகளில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறேன் நல்லது கேட்டது அனைத்தும் வெளிநாட்டு வாசிக்கு தூரத்து செய்திதான் ஆனால் அவன் மரணமும் அவனது உறவுகளுக்கு துரத்து செய்தியாகி போவதுதான் மிகக்கொடுமையான விடயம் இங்கு கத்தாரில் அபூஹமூர் மைய வாடியில் குடும்பங்களின்  கனவுகளை சுமந்துவந்த எத்தனையோ உறவுகள் கபூருக்குள் நித்திய துயில் கொள்கின்றனர் 


பச்சு என்கிற பதுர்டீன் குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் வாப்பா கத்தாரில் இருக்கிறார் இவனையும் வெளிநாடு போக சொல்லி பலர் நிர்பந்தித்தும் அவனுக்கு செல்ல விருப்பம் இல்லை ஊரில் ஏதாவது சொந்த தொழில் செய்து செட்டில் ஆகவேண்டும் என்பது அவனது ஆசை இதனால் அவன் நேசித்த அவனது மச்சியை கூட அவனால் திருமணம் முடிக்க முடியாமல் போய் விட்டது இதற்குள் கொரோனா வேறு எமது வாழ்வில் எப்படி செல்வாக்கு செலுத்தியது என்பதும் நாட்டுக்கு வர ஒரு நாள் இருக்கையில் மௌத்தாகி போன வாப்பாவின் மைய்யித்தை எப்படி நாட்டுக்கு கொண்டு வந்தான் என்பதும் உம்மா கடைசியாக வாப்பாவின் முகத்தை பார்க்க ஆசைப்பட்டதை நிறைவேற்றினானா என்பதும்தான் பாடம் அதில் மௌத்தாகிப்போன கமர்தினின் நண்பன் ஹசன் என்ற ஒரு கதாப்பாத்திரம் இருக்கும் அத்தனை பிணைப்பு அவர் வசனங்களால் நமக்கு ஏற்படும்  முஹ்ஸின் இயக்கி இருக்கும் இந்த படத்தில் எனது பிரியமான இயக்குனர் பசில் ஜோசப் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் 

அதிலும் குறிப்பாக கோவிந்த் வசந்த் இசையில் பாத்திமா ஜஹான் பாடிய பிரேமகத்து பாட்டு மனதில் நிற்கிறது அதில் ஒரு வரி வரும் 

Priyane Priyane Priyane Priyane
Varikal Nee Vayikkyanay Eyuthunnathare
Raa Pakaludayonayonte Namamodi Premathale

அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

இந்த வரிகளை நீங்கள் படிக்க எழுதுகிறேன்

என் ஆன்மாவைக் கவரும் அன்புடன், எஜமானரின் பெயரில், பகல் மற்றும் இரவுகளைக் காப்பவர்


Nee Illa Maniyarayulil,
Njan Alle Maqbara Ullil
Nee Ullora Irularayil
Njan Ille Theeeyaay

எங்கள் திருமண பந்தலில் உங்கள் பக்கத்தில் இல்லையென்றால்,

என் இதயம் தனிமையான கல்லறையாக மாறுகிறது.

நீங்கள் எந்த இருளில் வசித்தாலும்,

ஒரு சூடான தீக்குளி நான் இருப்பேன்.

Kulirumbol Choodekan
Thalarumbol Koottekan
Priyane Nee Novalle
Poomeni Thalodave

குளிரில், நான் உங்கள் நெருப்பாக இருப்பேன்

சோர்வில், நான் உங்கள் ஓய்வாக இருப்பேன்

விரக்தியடையாதே, என் அன்பே

உன்னுடைய மென்மையான உடலைப் பற்றிக்கொள்ளட்டும்

Murivellam Maykkame
Poonkavilil Muthame
Kanne Kann Nirayalle Karunamayanayonte
Kannil Nee Kuliranee

உன் காயங்களை ஆற்றட்டும்

உன் புருவத்தில் முத்தமிடுகிறேன்

அழாதே, என் அன்பே. ஏனென்றால் நீங்கள் விலைமதிப்பற்றவர் மற்றும் மரியாதைக்குரியவர்

தெய்வீகத்தின் பார்வையில்


Verazham Vannu Nee Kathil Thannu

Puthu Pookkal Vannu Rithu Kaval Ninnu

Nee Poyeram Poovadi 


உங்கள் ஆழத்தில் என் வேர்கள், ஆழமான மற்றும் ஆழமானவை

நீங்கள் மிகவும் தூய்மையான அன்பைக் கொண்டு வந்தீர்கள்

எனக்காக புதிய பூக்கள் மலர்ந்தன

பருவங்கள் நமக்குக் காவலாக இருந்தன

திரும்பி வா, என் அன்பே வீட்டிற்கு வா


ஒரு முறை பார்த்து விடுங்கள் மலையாளம் தெரிந்தால் மலையாளத்தில்






June 09, 2018

என் ஒற்றை மேகமே

என் ஒற்றை மேகமே 
என் கனவுகளின் இளவரசியே
மந்திர புன்னகையின் மாயக்காரியே 
உன் மடி உறங்க
உன் கன்னத்தில் 
முத்தங்களால் கவிதை எழுத
உன் கனவுகளில் தென்றலின் தடம் பதிக்க
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்
இடம் மாற்றிக் கொள்ள
என் கண்ணீரில் உனை நனைக்க
உன் புன்னகையை நான் பூசிக்கொள்ள
காதலின் அர்த்தம் தெரிய
காமத்தின் மர்மம் தெளிய
வாழ்வின் சுவை புரிய
தகஜ்ஜத்தின் முஸல்லா விரிய
பஜ்ரின் தேனீர் சுவைக்க
கடைசி வரை சுவர்க்கம் வரை
உன்னோடு கைகோர்த்து பயணிக்க
என் நொடிகள் அனைத்தையும் கோர்க்கிறேன்

August 02, 2016

விடையில்லா குழப்பம்


உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும் 
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்
வன்முறைகளுக்கு அப்பால்
வாழ்ந்து பாப்போம் வா
ஒன்றோடு இரண்டாக
மூன்றை சேர்த்தது நீதானே
இருள் மேகங்கள்
தெளித்து விட்ட
குழப்பத்தில் துளிகளை
என்மீது
விசிறி எறிந்தவள் நீதானே
என் உள்ளத்தில்
உறைந்து விட்ட
வலி தாங்க நினைவுகளோடு
உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும்
விடு பட நினைக்கையில்
காதலிக்க தொடங்குகிறோம்

January 30, 2016

இறுதிச் சுற்று-திரைவிமர்சனம்

சினிமா எனக்கு எப்பவுமே எதையாவது எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது நல்லதோ கேட்டதோ . நீண்ட நாட்களாய் நான் காத்திருந்த ஒரு படம் இறுதி சுற்று நேற்று அதை நண்பர்களுடன் பார்த்தாகி விட்டது இன்று இந்த பதிவு எழுதும் வரையும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியானால் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றுமொரு சினிமா இது.
எனக்கு முஹம்மது அலியை தெரியும் குத்துச் சண்டை தெரியும் என்னை   போலவே உங்களுக்கும் இது தெரியும் அதன் பின்னால் உள்ள வலி போராட்டம் வேதனை வெறி காதல் காமாம் துரோகம் தெரியுமா உங்களுக்கு அதுவே இறுதி சுற்று. 
      ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில் இந்தியிலும், தமிழிலும் வெளியாகின்றது இந்தப் படம்!
மாதவனுக்கு இன்னொரு மகுடம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் – உடலைச் செதுக்குவதிலும் – குத்துச் சண்டை பயிற்சிகளில் ஈடுபடுவதிலும் – நடிப்பிலும்!
தமிழில் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு, தடம் மாறாத திரைக்கதையும், பெண்களுக்கான குத்துச்சண்டை விளையாட்டு என்ற இதுவரை யாரும் கையாளாத கதைக்களம் என்பதும் மிகவும் பிடித்துப் போகும்.
வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களை வருண் மணியனின் ரேடியன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் சசிகாந்த். இவருடைய ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம், தற்போது சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் கைகோத்து. இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘இறுதிச் சுற்று’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
கதை-திரைக்கதை

தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று!

குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக்  கோச்சாக இருக்கிறார் மாதவன். 

நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.
சென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம்,  தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த  பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா. 

கோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை,  அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள்.  இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.

கலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிறுவது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி.

பிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக்! 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன?' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..! ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்! 
ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங். 

இயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா!
பெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி "அண்ட், த  வின்னர் ஈஸ்...." என‌ அறிவிக்கலாம்!
டெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!

November 07, 2015

அனுசாந் நான் கவிதை


கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை.

கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின் மொழியும் அதன் உணர்வுகளும் நன்கு தெரியும். அவனது விரல்கள் பிரசவித்ததை அவனது குரல்களால் அனைத்தெடுக்க முடியும். எத்தனையோ கவிதைகள் வாசிக்க கேட்டு அழுது இருக்கிறேன் சிரித்து இருக்கிறேன் கோபப் பட்டு இருக்கிறேன்.

இந்த கவிதைகளை ஒலி வடிவாக கேட்பதோடு ஒரு மெல்லிய இசை தழுவிச் சென்றால் கண்களில் அந்த கவிதை வரிகள் தோன்றினால் அது எங்கோ எமை கூட்டிச் சென்று விடும். அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்குவது போல . காதலியில் தாவணியில் தலை துவட்டுவது போல. தந்தையிடம் திட்டு வாங்குவது போல சுகமான உணர்வு

இப்படியான  கவிதைகள் ஜாபிர் அவர்களால் ஆரம்ப காலங்களில் இலங்கை தொலைக்கட்சிகளில் தொகுத்து வழங்கப் பட்ட நிகழ்சிகளில் இடம் பெரும் பல நாட்கள் தவம் இருந்து பாத்திருக்கிறேன் பெரும் பாலும் அதில் மொழி பெயர்ப்பு கவிதைகள் தான் இடம் பெரும் இப்படி ஒரு கவிதை தொகுப்பு இருவெட்டாய் வெளி இட வேண்டும் என்பது எண்ணமாக இருந்தது

அப்படி ஒரு தொகுப்பு என் நண்பரால் வெளி வந்தது. என் கனவு இன்னொரு கண்களிலும் தோன்றி இருக்கிறது அது பிரசவமாகி விட்டது. ஆம் நண்பர் அனுசாந்தின் தலைப் பிரசவம்தான் அது அதுவே எங்களை நண்பர்களாக்கியது. ஆனால் ஒரு சிறு கவலை நான் 4 வருடங்கள் திருமலையின் கழித்திருக்கிறேன் ஆனால் அவர் அறிமுக மானதோ நான் இலங்கையை விட்டு வந்த பின்னரே. முன்பே அறிமுகமாகி இருந்தால் இனிய கவிதை பொழுதுகள் அவரோடு கழிந்திருக்கும்.




//வாசிப்பு எங்களிடம் மங்கிப்போன ஒன்று இதனால் நல்ல கவிதைகளையும் தவர விடுகிறோம் . நண்பர் Anushanth Sajeethaஇதற்காகவே தலைப் பிரசவத்தை ஒலி ஒளி வடிவில் தந்திருக்கிறார் ..... கவிதைகளைச் சுமந்த கவிஞன் தலைப் பிரசவமாய் பிரசவித்துள்ளான்//இது நண்பரின் கவிதை தொகுப்பை பார்த்ததும் என் முகப் புத்தகத்தில் குறித்துக் கொண்டது

அனுசாந்தின் தலைப் பிரசவம் ... இது அவர் பிரசவித்த கவிதைகளுக்கு தந்தையாய் வைத்த பெயர் அழகிய பிரசவம் ரசிகனாய் நான் வைக்கும் பெயர் .. தமிழ் மிதான அவரது காதல் அவரது காதலி மிதான அவரது காதல் வார்த்தைகாளாய் பிரசவமாகி உள்ளது. இந்த பதிவு எழுதும் இந்த நொடி வரை ஒரு மனவர்த்தம் உள்ளது இன்னும் அவரது தொகுப்பை முழுமையாய் கேட்டு முடிக்க வில்லை ஆனால் கவிஞரோ அடுத்த படைப்புக்கு தயாராகி விட்டார் 

ஒரு கவிஞன்
உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்
                                  வைரமுத்து 


அவரது கவிதைகள் பற்றி நான் விரிவாய் இங்கு அலசவில்லை காரணம் அது அலசப் பட வேண்டியதல்ல ரசிக்கப் பட வேண்டியது ... வாழ்த்துகள் நண்பா கலைப் பயணம் தொடர

அவரது சில கவிதைத் தடங்களை முகப் புத்தகத்தில் பார்க்கலாம் 
https://www.facebook.com/anushanth.anushanth

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1



ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது.

நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள் எல்லாம் அரச காரியாலயங்களை தெரிவு செய்ய .நானும் சொந்த ஊருக்கு (polonnaruwa)  திரும்பி இருந்தேன் அரச காரியாலயங்களில் இடம் தேட.
அந்த நேரத்தில் எனது சிரேஷ்ட (senior ) சகோதரியிடம் இருந்து வந்த அழைப்பின் பெயரால் மீண்டும் நான் கல்லூரில் கல்வி கற்ற திருகோணாமலை நகரத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Esoft Metro Campus நிறுவனத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்றேன். இந்த இடத்தில்  ஒரு விடயம் ஞாபகப் படுத்தப் பட வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் Esoft ,ICBT ,BCAS ,IBS  போன்ற நிறுவனங்களில் கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நிறுவனங்களில் ஏதும் எமது மாவட்டத்தில் அந்த நேரத்தில் காணப் படவில்லை ஆகவே வெளியூர் சென்றுதான் கற்க வேண்டும் அதற்கான செலவுகள் அதிகமாக கணப் பட்டமை இரண்டாவது இந்த மாதிரியான தனியார் நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என எண்ணியமை ( அது இல்லையென பின்னாட்களில் புரிந்தது)

இப்படி நாம் படிக்கவே முடியாது என எண்ணிய இடத்தில் விரிவுரையாளருக்கான நேர்முக பரீட்சைக்கு வந்திருப்பது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு நேராக சொந்த ஊரில் இருந்து வந்து இரங்கி  திருகோணமலையின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு எதிரில் அமைந்து உள்ள NSB BUILDING என அழைக்க பட்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடிக்கு ஏறினேன். நிறையவே தைரியம் இருந்தது காரணம் அதற்கு முதல் நாளே எனது சிரேஷ்ட மாணவியிடம் call  பண்ணி ஆயிரம்  கேள்விகள் கேட்டாகி விட்டது ஏன் என்றால் அவரும் அங்கேதான் வேலை பார்க்கிறார்.

கண்ணாடி கதவு திறந்து உள் நுழைந்ததும் வாரவேட்பரையில் ஒரு பெண் good morning என்றார் பதிலுக்கு நானும் good morning சொல்ல . sir நீங்க interview குதனே வந்து இருக்கிங்க உள்ள போங்க இதான் manager room என எதிரில் இருந்த room ஐ காட்டினால். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன்  youtube ,google அனைத்திலும் தேடிய How to face interview மனதிற்குள்ளே ஓடியது இதுதான் நான் தகவல் தொழில் நுட்பம் கற்ற பின்பு சந்திக்க போகும் முதலாவது நேர்முகப் பரீட்சை.

Excuse me may i coming என்ற வாசகத்துடன் உள் நுழைய Yes, Coming என்று வரவேற்றார் அன் நிறுவனத்தின் முகாமையாளர் Dewananth Kumarakurunathan . நீங்கதான fasni    cv தாங்க பாப்பம் என தமிழிலே ஆரம்பித்தது புது தெம்பை எனக்கு வழங்கியது பின்னர் சில கேள்வி விடை என நேர்முகப் பரீட்ச்சை இறுதியாய் சொன்னார் எல்லாம் ok  நாளைக்கு வந்து class ஒன்டு எடுங்கோ மாணவர்களில் feedback ஐயும் நீங்க எப்படி class எடுக்கிறிங்க என்டுரத்தையும் பொறுத்தே Result . எல்லா Class உம் English லதான் ஆனா நீங்க படிப்பிக்க போற பிள்ளையள் சிங்களம் எண்டுரதால சிங்களத்தாலதான் விளங்க படுத்த வேனும் ok  seeyou  என விடை கொடுத்தார்

ஆம் என தலையாட்டி வெளியே வந்தேன். ஒரே ஒரு குழப்பத்துடன். சிங்களம் என் தாய் மொழி அல்ல ஆனால் என் ஊர் வாழ்த்த சமூகம் பழகிய  நண்பர்களின் பொருட்டால் சிங்களம் தெரியும் ஆனால் சிங்களத்தில் கற்பிக்க கூடியலவு இருக்குமா என்ற சந்தேகமே ... என்ன ஆனது அடுத்து அடுத்த தொடரில்

August 26, 2015

ஹைக்கூ நீ - குறும்படம்


சில்லென மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க  ஒரு கதிரையில் நான் என் வலக்கரத்தில் தேனீர் எனது இடது தொடையின் மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள் அவளது கூந்தல் நனைந்த வாசம் முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும்.

அலைபாயுதே, சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி இன்னும் இருக்கு போன்ற படங்கள் தந்தது  போன்ற ஒரு உணர்வை  ஹைக்கு குறும் படம் பார்த்த போது உணர்ந்தேன்.

3 நிமிசத்துல ஒரு கப் cofee  என்  காதலி குடிக்கனும்டு தோணிச்சு அந்த உதட்டுல  இருக்குற  கடைசி சொட்டு  எனக்குத்தாண்டு  தோணிச்ச. என் bedroom ல pillow fight நடக்கனும்டு தோணிச்சு அதுக்கப்புறம் romantic பன்னனும்டு தோணிச்சு

உண்மைதாங்க

“The best feeling is falling in Love The craziest experience is making love”

காதல் நிறைய தமிழ் சினிமாட கருப் பொருள்தான் ஆனால் அது சொல்லப் படும் விதத்தில் தான் அதன் அழகும் வெற்றியும் தங்கி உள்ளது. காத்திருத்தல் காதலில் நிறையவே சாத்தியமான ஒன்று அதுதான் ஹைக்கு நீ குறும் படத்தின் கருப் பொருள்.

waiter ரோடு சேர்த்து நான்கு கதப்பத்திரங்கள் அவர்களின் பங்கை நன்றாகவே செய்திருக்கின்றார்கள் காட்சிகள் அழகு.


சூர்யா நாராயணன் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள் அருமையான படைப்பு நீங்கள் சினிமாவுக்குள் வந்து இது போன்ற முழு நீல படைப்புகளை வழங்க வேண்டுகிறோம்

குறும் படத்தை பார்வை இட


Related Posts Plugin for WordPress, Blogger...