fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

June 08, 2023

பிரவாசியிண்ட ஜீவிதம்

 மலையாள சினிமாவும் கதையும் கதை மாந்தர்களும் எமது வாழ்வோடு நாம் சந்திக்கும் மனிதர்களோடு ஒன்றிப்போவதால் என்னமோ எனக்கு மலையாள சினிமா மீது அலாதி பிரியம். சில படங்கள் மனதோடு சேர்த்து கண்களையும் நிறைத்து விடும் அப்படிதான் நான் அண்மையில் பார்த்த


"Kadina Kadoramee Andakadaham"  திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகி போனது கிட்டத்தட்ட ஒரு தசாப்பதம் கடல்தாண்டி எனக்கு கழிய போகிறது இத்தனை காலம் இந்த நாட்டில் நாடுவிட்டு வந்த நாடோடிகளில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறேன் நல்லது கேட்டது அனைத்தும் வெளிநாட்டு வாசிக்கு தூரத்து செய்திதான் ஆனால் அவன் மரணமும் அவனது உறவுகளுக்கு துரத்து செய்தியாகி போவதுதான் மிகக்கொடுமையான விடயம் இங்கு கத்தாரில் அபூஹமூர் மைய வாடியில் குடும்பங்களின்  கனவுகளை சுமந்துவந்த எத்தனையோ உறவுகள் கபூருக்குள் நித்திய துயில் கொள்கின்றனர் 


பச்சு என்கிற பதுர்டீன் குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் வாப்பா கத்தாரில் இருக்கிறார் இவனையும் வெளிநாடு போக சொல்லி பலர் நிர்பந்தித்தும் அவனுக்கு செல்ல விருப்பம் இல்லை ஊரில் ஏதாவது சொந்த தொழில் செய்து செட்டில் ஆகவேண்டும் என்பது அவனது ஆசை இதனால் அவன் நேசித்த அவனது மச்சியை கூட அவனால் திருமணம் முடிக்க முடியாமல் போய் விட்டது இதற்குள் கொரோனா வேறு எமது வாழ்வில் எப்படி செல்வாக்கு செலுத்தியது என்பதும் நாட்டுக்கு வர ஒரு நாள் இருக்கையில் மௌத்தாகி போன வாப்பாவின் மைய்யித்தை எப்படி நாட்டுக்கு கொண்டு வந்தான் என்பதும் உம்மா கடைசியாக வாப்பாவின் முகத்தை பார்க்க ஆசைப்பட்டதை நிறைவேற்றினானா என்பதும்தான் பாடம் அதில் மௌத்தாகிப்போன கமர்தினின் நண்பன் ஹசன் என்ற ஒரு கதாப்பாத்திரம் இருக்கும் அத்தனை பிணைப்பு அவர் வசனங்களால் நமக்கு ஏற்படும்  முஹ்ஸின் இயக்கி இருக்கும் இந்த படத்தில் எனது பிரியமான இயக்குனர் பசில் ஜோசப் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் 

அதிலும் குறிப்பாக கோவிந்த் வசந்த் இசையில் பாத்திமா ஜஹான் பாடிய பிரேமகத்து பாட்டு மனதில் நிற்கிறது அதில் ஒரு வரி வரும் 

Priyane Priyane Priyane Priyane
Varikal Nee Vayikkyanay Eyuthunnathare
Raa Pakaludayonayonte Namamodi Premathale

அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

இந்த வரிகளை நீங்கள் படிக்க எழுதுகிறேன்

என் ஆன்மாவைக் கவரும் அன்புடன், எஜமானரின் பெயரில், பகல் மற்றும் இரவுகளைக் காப்பவர்


Nee Illa Maniyarayulil,
Njan Alle Maqbara Ullil
Nee Ullora Irularayil
Njan Ille Theeeyaay

எங்கள் திருமண பந்தலில் உங்கள் பக்கத்தில் இல்லையென்றால்,

என் இதயம் தனிமையான கல்லறையாக மாறுகிறது.

நீங்கள் எந்த இருளில் வசித்தாலும்,

ஒரு சூடான தீக்குளி நான் இருப்பேன்.

Kulirumbol Choodekan
Thalarumbol Koottekan
Priyane Nee Novalle
Poomeni Thalodave

குளிரில், நான் உங்கள் நெருப்பாக இருப்பேன்

சோர்வில், நான் உங்கள் ஓய்வாக இருப்பேன்

விரக்தியடையாதே, என் அன்பே

உன்னுடைய மென்மையான உடலைப் பற்றிக்கொள்ளட்டும்

Murivellam Maykkame
Poonkavilil Muthame
Kanne Kann Nirayalle Karunamayanayonte
Kannil Nee Kuliranee

உன் காயங்களை ஆற்றட்டும்

உன் புருவத்தில் முத்தமிடுகிறேன்

அழாதே, என் அன்பே. ஏனென்றால் நீங்கள் விலைமதிப்பற்றவர் மற்றும் மரியாதைக்குரியவர்

தெய்வீகத்தின் பார்வையில்


Verazham Vannu Nee Kathil Thannu

Puthu Pookkal Vannu Rithu Kaval Ninnu

Nee Poyeram Poovadi 


உங்கள் ஆழத்தில் என் வேர்கள், ஆழமான மற்றும் ஆழமானவை

நீங்கள் மிகவும் தூய்மையான அன்பைக் கொண்டு வந்தீர்கள்

எனக்காக புதிய பூக்கள் மலர்ந்தன

பருவங்கள் நமக்குக் காவலாக இருந்தன

திரும்பி வா, என் அன்பே வீட்டிற்கு வா


ஒரு முறை பார்த்து விடுங்கள் மலையாளம் தெரிந்தால் மலையாளத்தில்






Related Posts Plugin for WordPress, Blogger...